சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாழை ஏலம்

சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாழை ஏலம் நடைபெற்றது.

Update: 2024-06-08 13:44 GMT

வாழை தார்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று வாழைத்தார்கள் ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் வாழைத்தார்கள் கொண்டு வந்தனர்

அதனை வாங்குவதற்காக திருப்பூர் சேலம் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர் தார் விலை: செவ்வாழை அதிக விலை : 1060 குறைந்த விலை: 280 தேன்வாழை அதிகவிலை: 680 குறைந்தவிலை:290 ரஸ்தாளி அதிகவிலை: 460 குறைந்தவிலை:150 பூவன் அதிகவிலை: 490 குறைந்தவிலை:150 மொந்தன் அதிகவிலை: 300,

குறைந்தவிலை:150 கிலோ விலை: கதளி அதிகவிலை: 45 குறைந்தவிலை:30 நேந்திரன் அதிகவிலை: 45 குறைந்தவிலை:25 விற்பனை நடைபெற்றதாக விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Tags:    

Similar News