வாலிபர் மீது பீர் பாட்டில் தாக்குதல் - 8 பேர் மீது வழக்கு

நாகர்கோவில் அருகே டாஸ்மாக் பாரில் வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2024-05-10 05:57 GMT
பைல் படம்

குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி மாடன் கோயில் தெருவை சேர்ந்தவர் வினித் (18) இவரது நண்பர் நண்பர்களான ஆகாஷ் (23),  ஜோஸ்வா (18),  ஆதீஷ் (20),  கிட்டு மதன் (19), ஆதி (23), ஹரி (23),  ராஜ் (23) மற்றும் மிக்கேல் (22)  ஆகியோருடன்  சேர்ந்து கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மது குடித்து உள்ளனர்.      அப்போது திடீரென ஆகாசுக்கும் வினித்துக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ஆகாஷ் உள்ளிட்ட எட்டு பேரும் சேர்ந்து வினித்தை தாக்கி பீர் பாட்டில் தலையில் அடித்தனர். இதில் பலத்த காயமடைந்த வினித் ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, மிக்கேலை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஏழு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News