பீர் பாட்டிலால் குத்தியவர் கைது
பீர் பாட்டிலால் குத்தியவர் கைது செய்யப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Update: 2024-02-28 15:50 GMT
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அம்பேத்கர் தெருவில் வசித்து வருபவர் கோபி, 20. இவர், நேற்று முன்தினம் காலை வயல்வெளியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த ருக்மாங்கதன், 24, ஷாருக்கான், 35, ஆகிய இருவரும், கோபியுடன் தகராறில் ஈடுபட்டனர். இதில், ஷாருக்கான் பீர் பாட்டிலால் கோபியை குத்தினார். இதில், காயமடைந்த கோபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, வெங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.