செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க கண்காட்சி

குளிதிகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க கண்காட்சி நடந்தது.

Update: 2024-01-24 09:13 GMT

குளிதிகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க கண்காட்சி நடந்தது.

 தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு நல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் குளிதிகை ஊராட்சி சாந்தி நகர் பகுதியில், செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் சாதனை விளக்கும் புகைப்பட கண்காட்சியினை குளிதிகை ஊராட்சி மன்ற தலைவர் சுமித்ரா பாபு முன்னிலையில் கிராம பொதுமக்கள் பார்வையிட்டனர்.

இந்த கண்காட்சியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை இடம் பெற்று இருந்தது.

Tags:    

Similar News