உரத்த சிந்தனை சார்பில் பாரதி உலா நிகழ்ச்சி - ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்

மாணவர்கள் பாரதியார் கவிதைகளை ஆர்வமுடன் அறிந்து கொண்டனர்

Update: 2023-12-02 05:55 GMT
உரத்த சிந்தனை சார்பில் பாரதி உலா நிகழ்ச்சி
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வில்வராயநல்லூர் வி.கே.எம். உயர்நிலைப்பள்ளியில் உரத்த சிந்தனை சார்பில் ஒன்பதாம் ஆண்டு பாரதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்களிடையே பாரதியார் குறித்த கவிதை போட்டி,பேச்சு போட்டி, பாரதியார் குறித்த பாட்டுப்போட்டி, ஓவிய போட்டி நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் உரத்த சிந்தனை தலைவர் உதய்ராம், செயலர் பத்மினி பட்டாபிராம், பள்ளிச்செயலாளர் கி. குமார், திரைப்பட நடிகர் டில்லிகணேஷ் மதுராந்தகம் மாவட்டக் கல்வி அலுவலர் அய்யாசாமி, மன்ற ஒருங்கிணைப்பாளர் கருணாகரன், பள்ளிக் கல்வி துணை ஆய்வாளர் மணிமாறன், கண்காணிப்பாளர் ராதிகா ஜெகந்நாதன், செயற்குழு உறுப்பினர் பிச்சம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News