4 கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகளுக்கு பூமி பூஜை

சங்ககிரி அருகே ரூ. 4 கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது.

Update: 2024-02-07 16:30 GMT

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள அரசிராமணி பேரூராட்சி பகுதியில் 4கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளுக்கு முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி பேரூராட்சியில் நபார்டு சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 2 கோடியே 41 இலட்சம் மதிப்பீட்டில் வெள்ளூற்று பெருமாள் கோவில் முதல் எல்லப்பாளையம் வரை தார் சாலை அமைத்தல், ‌ மற்றும் 15வது நிதி ஆணையம் சுகாதார மானிய திட்டத்தில் 1கோடியே 20இலட்சம் மதிப்பீட்டில் குள்ளம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுதல், கலைஞர் நகர் புற மேம்பாடு திட்டத்தில் 14இலட்சம் மதிப்பீட்டில் காட்டகவுண்டனூரில் குட்டை மேம்பாடு செய்தல்,8வது வார்டு பகுதியில் 24இலட்சம் மதிப்பீட்டில் பூங்கா மேம்பாடு செய்தல் என ரூ4கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளுக்கு முன்னாள் அமைச்சரும் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான டிஎம் செல்வகணபதி தலைமையில் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்..

அப்போது மாவட்ட அவை தலைவர் தங்கமுத்து, துணை செயலாளர் சம்பத் குமார்,தலைமை செயற்குழு உறுப்பினர் பிஏ முருகேசன், அரசிராமணி பேரூராட்சி தலைவர் காவேரி, துணைத் தலைவர் கருணாநிதி உட்பட திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News