திட்டப்பணிகளுக்கான பூமி பூஜை

முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ.20 லட்சத்தில் திட்டப்பணிகளுக்கான பூமி பூஜையை எம்.எல்.ஏ., அருள் தொடங்கி வைத்தார்.

Update: 2024-02-27 01:14 GMT

முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ.20 லட்சத்தில் திட்டப்பணிகளுக்கான பூமி பூஜையை எம்.எல்.ஏ., அருள் தொடங்கி வைத்தார். 

சேலம் மேற்கு தொகுதி முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி களர்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11 லட்சம் மதிப்பிலும், முத்துநாயக்கன்பட்டி மரத்துக்குட்டை பகுதியில் ரூ.9 லட்சத்திலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடந்தது. மேற்கு தொகுதி அருள் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், ஊராட்சி தலைவர் சாரதா ராஜா, மாவட்ட அமைப்பு செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர் காமராஜ், துணைத்தலைவர் சக்தி மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News