அரசுப் பள்ளியில் மிதிவண்டிகள் வழங்கும் விழா - மேயர் சத்யா பங்கேற்பு

Update: 2023-11-29 06:55 GMT

மிதிவண்டி

வழங்கல்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஓசூரில் மாநகராட்சிக்கு உட்பட்ட முல்லை நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பில் 360 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. ஓசூர் மாநகர மேயர் சத்யா, மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று சைக்கிள்களை வழங்கினர். விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் காந்தி தலைமை தாங்கினார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மகேஷ் பாபு அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்தய்யா, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக பொருளாளர்சுகுமாரன் ஓசூர் மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் கிழக்குப் பகுதி திமுக செயலாளர் ராமு,மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சக்திவேல், பள்ளி மேலாண்மை குழு தலைவர் காயத்ரி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் சங்கரநாராயணன்,அருளரசன் , முருகன்,முனிராஜ், மோகன்குமார், பொன்னுவேல்,பிரபாகர், மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News