காரப்பேட்டை பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா

தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2024-03-01 12:20 GMT

மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மகமைத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். செயலாளர் பழரசம் பா. விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக 47வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரெக்சிலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். தலைமை ஆசிரியர் எஸ்.ராஜதுரை சாமுவேல் வரவேற்புரை ஆற்றினார். பள்ளிச் செயலாளர் ரமேஷ் நன்றியுரை ஆற்றினார்.  முன்னாள் மாவட்ட கல்வி அதிகாரி தமிழ்ச்செல்வி கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார். விழா நிகழ்வுகளை பள்ளியின் கலைக்குழு ஆசிரியர் பார்ஜின் தொகுத்து வழங்கினார். விழாவில் மகமை துணை செயலர், ஆனந்த கண்ணன் மகமை பொருளாளர், மதியழகன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலர், ராஜசேகரன் நிர்வாக குழு உறுப்பினர்கள், ராமச்சந்திரன், ராதாகிருஷ்ணன், பார்த்திபன், எம் எஸ் எஸ் சுரேஷ், அரவிந்த், மதியழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News