அரவக்குறிச்சி அருகே பேருந்து மீது பைக் மோதல்: தம்பதி படுகாயம்

அரவக்குறிச்சி அருகே பயணிகள் இறங்கி கொண்டு இருந்த பேருந்தின் பின்னால் பைக் மோதிய விபத்தில் தம்பதி படுகாயம் அடைந்தனர்.

Update: 2024-06-15 13:57 GMT

சின்ன தாராபுரம்

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், மேட்டுப்பாளையம், அருகே உள்ள வரகாளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் வயது 37.

இவர் அரசு பேருந்து ஓட்டுனர். ஜூன் 13ஆம் தேதி மதியம் 12:00 மணி அளவில் சின்ன தாராபுரத்தில் இருந்து தென்னிலை செல்லும் சாலையில் பேருந்தை இயக்கிக் கொண்டிருந்த செல்வராஜ், சின்னதாராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, ஆர் என் மெட்ரிகுலேஷன் பள்ளி பஸ் ஸ்டாப் அருகே பயணிகளை இறக்கிக் கொண்டு இருந்தார். அப்போது, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா,பெரிய புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த சாமியப்பன் வயது 70,

இவரது மனைவி சரஸ்வதி வயது 63, இவர்கள் இருவரும் வேகமாக வந்த டூ வீலர், பயணிகளை இறக்கி கொண்டிருந்த பேருந்தின் பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கணவன்-மனைவி இருவரும் படுகாயம் அடைந்ததால், உடனடியாக இருவரையும் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுனர் செல்வராஜ் அளித்த புகார் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை கவனக்குறைவாகவும், வேகமாகவும் ஓட்டி விபத்து ஏற்பட காரணமான சாமியப்பன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News