கரூர் அருகே பைக் நேருக்கு நேர் மோதல்: மூன்று பேர் படுகாயம்

கரூர் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update: 2024-03-21 16:03 GMT

காவல் நிலையம் 

 கரூர் மாவட்டம், பசுபதிபாளையம், வடக்குதெரு, ஆண்டாள்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினவேல் வயது 34. இதே போல, திருச்சி மாவட்டம்,லால்குடி, கோவாண்டன் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் வயது 56. இவர்கள் இருவரும் இவர்களுக்கு சொந்தமான டூவீலரில் திண்டுக்கல் - கரூர் செல்லும் சாலையில், மார்ச் 19ஆம் தேதி காலை 7 மணி அளவில் சென்று கொண்டிருந்தனர்.

இவரது வாகனம், சுக்காலியூர் செக்போஸ்ட் நால்ரோடு அருகே சென்ற போது,எதிர் திசையில், ஈரோடு மாவட்டம், அரச்சலூர், வசியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் வயது 27 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், ரத்தினவேல் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

Advertisement

இந்த விபத்தில் இரண்டு டூவீலர்களும் கீழே விழுந்து மூவருக்கும் காயங்கள் ஏற்பட்டது. மூவரையும் உடனடியாக மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், ரத்தினவேலை கரூரில் உள்ள நிஷா மருத்துவமனையிலும், ராஜமாணிக்கத்தை ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையிலும், விபத்து ஏற்பட காரணமான தினேஷை கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ரத்தினவேல் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்பட காரணமான தினேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.

Tags:    

Similar News