பைக் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் படுகாயம்

வாங்கல் அருகே பைக் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.;

Update: 2024-02-01 15:16 GMT

காவல் நிலையம்

 கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுக்கா, பஞ்சமாதேவி பகுதியைச் சேர்ந்தவர் சோழியப்பன் வயது 49. இவர் ஜனவரி 30 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் எல்லை மேட்டில் இருந்து மண்மங்கலம் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.

இவரது வாகனம் வாங்கல் விநாயகா சேம்பர் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர் திசையில் BY 01 AH 1512 என்ற எண் கொண்ட ஸ்பிளெண்டர் பிளஸ் வாகனத்தில் வேகமாக வந்த நபர், சோழியப்பன் ஓட்டி வந்த டூவீலர் மீது, நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

Advertisement

இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த சோழியப்பனுக்கு, தலை, உதடு ,இடது கை மணிக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சோழியப்பனின் மகள் சுதா வயது 31 என்பவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்.

டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வாங்கல் காவல்துறையினர்.

Tags:    

Similar News