நடந்து சென்றவர் மீது பைக் மோதி விபத்து: ஒருவர் படுகாயம்

இரவு நேரத்தில் நடந்து சென்றவர் மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்துக்குள்ளனதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2024-04-25 11:21 GMT

காவல் நிலையம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சமுத்து மகன் முருகன் வயது 55. இவர் ஏப்ரல் 22ஆம் தேதி இரவு 7 மணி அளவில், கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் எல்லைக்குட்பட்ட, கரூர்-திண்டுக்கல் சாலையில், பிச்சம்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே சாலையில் வேகமாக வந்த, திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த காமன் மகன் நல்லசிவம் வயது 27 என்பவர், வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், நடந்து சென்ற முருகன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த முருகனுக்கு இடது கையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால்,

உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக முருகன் அளித்த புகார் பேரில் சம்பவ இடத்திற்குஏ சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்,

இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நல்ல சிவம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags:    

Similar News