பைக் கவிழ்ந்து விபத்து - தாய் குழந்தை படுகாயம் !

வெள்ளிச்சந்தை அருகே பைக் விபத்தில் தாய் குழந்தை படுகாயம் அடைந்தனர்.

Update: 2024-03-13 06:16 GMT

விபத்து

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக் குறிச்சி அருகே கடியப்பட்டணம் அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கிய சூசை அஜின் (30).  இவர் கடல் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ரெஜிலா (28) இந்த தம்பதிக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சம்போதனம் உடல் நலம் இல்லாத குழந்தைக்கு மருந்து வாங்குவதற்காக பைக்கில் ஆரோக்கிய அஜின் தனது குழந்தை மனைவியுடன் ஆசாரிபள்ளம் பகுதியில் உள்ள ஒரு தனியார்  மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருந்து வாங்கி விட்டு அவர்கள் வீடு திரும்பி கொண்டிருந்தனர். வெள்ளமோடி பகுதியில் வரும்போது பைக்கின் குறுக்கே சாலையில் நாய் வந்து திடீரென பாய்ந்தது. உடனே அவர் திடீரென பிரேக் போட்டார். இதில் பைக் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் அவரது மனைவி ரெஜிலா மற்றும் ஐந்து வயது குழந்தையும் படுகாயம் அடைந்தனர். அப்பகுதியினர் இரண்டு பேரையும் மீட்டு நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 2 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். வெள்ளிச்சந்தை போலீசார் ஆரோக்கிய அஜின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News