மீனாம்பிகை பங்களா அருகே பைக் மாயம்: போலீசார் விசாரணை

மீனாம்பிகை பங்களா அருகே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Update: 2024-05-23 13:13 GMT

காவல் நிலையம்

விருதுநகர் மீனாம்பிகை பங்களா அருகே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை காவல் நிலையத்தில் புகார் விருதுநகர் கலைஞர் நகர் பகுதியில் சேர்ந்தவர் ஜெயக்குமார் வயது 34 இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.

இவர் நிதி நிறுவனத்தின் கீழே தனது இருசக்கர வாகனத்தை சாவியுடன் நிறுத்தி வைத்துவிட்டு அலுவலகத்திற்கு சென்று பணியை முடித்துவிட்டு சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த பொழுது இருசக்கர வாகனமும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்,

தனது இரு சக்கர வாகனத்தை பல்வேறு பகுதிகளிலும் தேடி கிடைக்காத நிலையில் அதனை கண்டுபிடித்து தர கோரி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

Tags:    

Similar News