பசுபதிபாளையத்தில் பைக்- சரக்கு வாகனம் மோதல்: ஒருவர் படுகாயம்

பசுபதிபாளையத்தில் பைக்- சரக்கு வாகனம் மோதிக் கொண்டதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2024-05-18 14:40 GMT

காவல் நிலையம்

கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த லிங்கேஸ்வரர் மகன் மலையப்பசாமி. வயது 44. இவரும் கரூர் காக்காவடி பகுதியைச் சேர்ந்த ரமணி மகன் கார்த்திக் வயது 27 ஆகிய இருவரும், மே 15 ஆம் தேதி மதியம் 12:45 மணி அளவில், கரூர் - சேலம் சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டிருந்தனர்.

இவர்களது வாகனம் வெங்கமேடு மெட்ரோ பிளஸ் கம்பெனி அருகே சென்றபோது, எதிர் திசையில், கரூர் திருமாநிலையூர் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் மகன் வரதராஜ் வயது 33 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டாட்டா ஏஸ் வாகனம், மலையப்ப சாமி ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த கார்த்திக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மலையப்ப சாமி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், tata ace வாகனத்தை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வரதராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் வெங்கமேடு காவல்துறையினர்.

Tags:    

Similar News