பாவூா்சத்திரத்தில் பாஜக கட்சியினர் ஆா்ப்பாட்டம்

பாவூா்சத்திரத்தில் நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-12-28 02:41 GMT

ஆர்ப்பாட்டம் 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய பாஜக சாா்பில், நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து பாவூா்சத்திரம் பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி- தென்காசி நான்குவழிச் சாலைப் பணிகளில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் கூடாது, நீா்வழிப் பாதைகளில் பாலம் அமைக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா். துணைச் செயலா் சோ்மன், மாவட்ட வா்த்தகா் பிரிவுச் செயலா் ஆறுமுகம், கூட்டுறவுப் பிரிவு மாவட்டச் செயலா் காா்மேகநாதன், இளைஞரணிச் செயலா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியப் பொருளாளா் தட்சிணாமூா்த்தி, மாவட்ட விவசாய அணி பொதுச்செயலா் விஜயசேகா் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News