நூதன முறையில் பாஜகவினர் பணம் பட்டுவாடா: திமுகவினர் புகார்

நெல்லையில் நூதன முறையில் பாஜகவினர் பணம் பட்டுவாடா செய்வதாக திமுகவினர் புகார் அளித்துள்ளனர்.

Update: 2024-04-15 09:26 GMT

புகார் அளித்த திமுகவினர்

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான் தலைமையில் திமுகவினர் தேர்தல் நடத்தும் அதிகாரி கார்த்திகேயனிடம் நேற்று (ஏப்.14) புகார் மனு அளித்தனர். அதில் பாஜக சார்பில் பொதுமக்களுக்கு செல்போன்களில் லிங்க் ஒன்று வருகின்றது. அதை அழுத்தினால் 500 ரூபாய் கிடைக்கும் என கூறப்படுகின்றது. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
Tags:    

Similar News