ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-04 10:32 GMT
ஆர்பாட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று இந்து சமய அறநிலைத்துறை சார்பில் சிறப்பு வழிபாடு, சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் திமுகவினர் பலர் பங்கேற்றனர்.

அயோத்தி ராமர் கோவில் திறப்பின்போது கோயிலில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் நடத்த அனுமதி மறுத்துவிட்டு தற்போது சமபந்தி விருந்து நடத்துவதாக கூறி இந்து சமய அறநிலை துறையை கண்டித்து பாஜகவினர் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News