பாஜகவை புறக்கணிக்க வேண்டும்: டிஆர்பி ராஜா

40 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-14 14:57 GMT

வாக்கு சேகரித்த அமைச்சர்

தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பீளமேடு ஆர்டிஓ அலுவலக சாலையில் தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா,

கலந்துகொண்டு திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.பிரச்சாரத்தின் போது பேசுகையில் இந்தியாவின் நம்பர் ஒன் முதன்மை மாநிலம் என்ற அந்தஸ்தை பெற்றுத் தந்த ஸ்டாலின் எனவும் ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் அமைத்த கூட்டத்தை பார்த்தபோது பிரம்மாண்டமான வெற்றி இந்தியா கூட்டணி என்பது உறுதியாகிறது .

எனவும் இது இந்தியாவிற்கு விடியல் பிறக்கட்டும் எனக் குறிப்பதாகும் என்றார்.இது தேர்தல் அல்ல இனத்திற்கான போர் என்றவர் ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்கான நடைபெறும் இந்த தேர்தலில் தமிழ்நாட்டின் தனித்துவமும் சகோதரத்துவம் வளர்ச்சியும் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் அதற்காக ஒன்றியத்தில் நமக்கான ஒரு அரசு டெல்லியில் அமைய வேண்டும் இந்தியாவின் மத நல்லிணக்கம் சகோதரத்துவம்,

செழித்தோங்க வேண்டும் எனவும் குறிப்பாக இப்போது நடைபெற உள்ள போரில் தமிழ்நாட்டில் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளும் வெற்றி பெறும் என்றார். பெண்களுக்கான முன்னேற்றத்திற்கு வித்திடும் அரசு திமுக அரசு என்ற அவர் பெண்களின் விடியல் பயணம், பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை,நான் முதல்வன் திட்டத்தில் படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பெரும் அற்புதமான திட்டம் அடுத்த கட்டமாக பெண் விடுதலைக்காக நூறாண்டுகளாக பயணிக்கும்,

திமுகவின் சிறப்பான திட்டமாக புதுமைப்பெண் திட்டம் படிக்கும் பெண் பிள்ளைகளுக்காக மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. படித்து வரும் பிள்ளைகள் இன்னும் பத்து 20 ஆண்டுகள் கழித்து படித்து நல்ல ஒரு வேலையில் அமர்ந்து தமிழகத்தை அடுத்த கட்டத்திற்கு நடத்துவதற்கு இந்தத் திட்டங்கள் உதவியாக இருக்கும் என்றார்.காலை பசியில்லாமல் இருந்தவன் கல்வி முழுமையாகும் என்பதற்காக கொண்டு வந்த திட்டம் காலை உணவு திட்டம் எனவும் இந்த திட்டத்தை எந்த ஒரு அரசும் இதுவரை கொண்டு வந்ததில்லை என்றவர்,

இன்று தமிழ்நாட்டில் செயல்படுத்தக்கூடிய திட்டத்தை பார்த்து கனடா நாட்டிலும் அதை செயல்படுத்துகிறார்கள் இதை மக்களிடம் கொண்டு சேர்த்து வாக்குகள் சேகரிக்கிறோம் என்றார். மத்தியிலும் மாற்றம் வர வேண்டும் ஆட்சிக்கு வரும்போது நாற்பது ரூபாய்க்கு பெட்ரோல் கிடைக்கும் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு தற்போது 100 ரூபாய் பெட்ரோல் விலை விற்கும் பொழுது அது அப்படித்தான் நடக்கும் என்கிறார்கள்.

தற்போதுள்ள அதிமுக கூட்டணி இந்தியா கூட்டணிக்கும் இல்லாமல் பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கும் இல்லாமல் தனித்து நின்று பெரும் ஓட்டுகள் அனைத்தும் வீணான வாக்குகள் ஆகும். திமுக இளைஞர் அணி தலைவர் குறிப்பிடுவது போல 29 பைசா மோடி தமிழ்நாட்டில் இருந்து கொடுக்கக்கூடிய ஜிஎஸ்டி வரி ஒரு ரூபாய் கொடுத்தால் திருப்பி 29 பைசா தான் தருகிறார்கள் இருப்பினும் நாம் வளர்ந்த மாநிலம் என்பதால் அதை பொறுத்துக் கொண்டாலும் மீதமுள்ள தொகையில் வடநாட்டில் தேவையில்லாத சிலைகள் கட்டுவதும் 1200 கோடிக்கு பாலம் கட்டி அது ஆற்றில் விழுந்தது என பல ஊழல்கள் செய்வதும் தற்போதுள்ள பாஜக ஆட்சிக்கு கைவந்த கலை ஆகும்.இதற்கு பதிலாக பள்ளிகள் கட்டுவது, தொழிலை பெருக்குவது போன்றவற்றை மேற்கொள்ளாமல் வீண் செலவு செய்வதற்காகவே நமது நாம் கொடுக்கும் வரி பயன்படுகிறது என்றார்.நமக்கு பேரிடர் போன்ற பெரும் துயரங்கள் வந்த போதிலும் ஒன்றிய அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு உதவியும் வருவதில்லை எனவும் இதுவரை எப்போதாவது வருகின்ற பிரதமர் தற்போது தேர்தலை ஒட்டி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார்.

ஐந்து முதல் எட்டு முறை கோவை வந்து செல்வது ரோட் ஷோ நடத்துவது என்பதெல்லாம் மக்களை முட்டாள்கள் ஆக்குவதாகும் எனவும் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்கும் பட்சத்தில் மகத்தான பல வளர்ச்சி திட்டங்கள் தமிழ்நாட்டில் குறிப்பாக கோவைக்கு கிடைக்கும் என்றார். கோவை விமான நிலையம் விரிவாக்கம்,புதிய கிரிக்கெட் மைதானம் ஏற்கனவே 2000 கோடி ரூபாய் செலவிடப்பட்டு விரிவாக்க பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில் ஒரு பொய்யான வாக்குறுதியாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விரிவாக்கப் பணி துவங்கும் என பாஜகவினர் பொய் செய்தி பரப்பி வருகின்றனர் என்ற அவர் இந்தத் தேர்தல் முடிந்தவுடன் விரிவாக்க பணி மீண்டும் துவங்கும் என்ற அவர் நாட்டின் வளர்ச்சிக்கு எது செய்ய வேண்டும் வேண்டாம் என எதுவும் தெரியாமல் பொய் பிரச்சாரத்தை பரப்பி வருகின்றனர்.

பாஜகவினர் எனவே பாஜகவினரை நிராகரிங்கள் வளர்ச்சியான பாதைக்கு மாற்றும் இந்தியா கூட்டணிக்கு தங்கள் பெருவாரியான வாக்குகளை செலுத்துங்கள் இந்தியா கூட்டணி வேட்பாளரான கணபதி ராஜ்குமாரை வெற்றியடைய செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News