பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தருமை ஆதீனத்திடம் ஆசி

மயிலாடுதுறை தருமபுரத்தில் உள்ள குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் கல்விக்கடவுள் சரஸ்வதி தேவியை வணங்கி பெற்றோருக்கு பாத பூஜை

Update: 2024-02-16 07:04 GMT

தருமை ஆதீனத்திடம் ஆசி

மயிலாடுதுறை அருகே தருமபுரம் பகுதியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகள் மற்றும் மாணவிகள் மாதா, பிதா, குரு , தெய்வம் ஆகியோர் ஆசீர்வாதங்களை பெறும் வகையில் இன்று ஆசிர்வாத திருநாள் விழா பள்ளியில் நடைபெற்றது. தருமபுர ஆதீனம் 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் கல்வி கடவுள் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்தனர். அதனைத் தொடர்ந்து வரிசையாக நின்று அனைத்து ஆசிரியர்களிடமும் மலர் தூவி ஆசீர்வாதம் பெற்றனர். பின்னர் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக சுவாமிகள் பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட பேனா மற்றும் பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்களை கொடுத்து அருள் ஆசி வழங்கினார்.
Tags:    

Similar News