ஊத்தங்கரை பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம்

ஊத்தங்கரை பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 51 மாணவர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-02-22 01:56 GMT

ஊத்தங்கரை பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது 51 மாணவர்கள் பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் தியாகராஜன் வரவேற்றார். முதல்வர் (பொ) விஜயன் ரத்ததான முகாமை துவக்கி வைத்தார். ஊத்தங்கரை தாசில்தார் திருமலை ராஜன் சிறப்புரையாற்றினார்.

ஊத்தங்கரை ரெட் கிராஸ் சங்க தலைவர் டாக்டர் தேவராசு, மருத்துவர்கள் அன்பரசி, சுதர்ஷன், ஸ்ரீ பால் , நேசம் தொண்டு நிறுவனர் குணசேகரன்,ரெட் கிராஸ் நிர்வாகிகள் ரஜினி சங்கர், துரைராஜ் பலரும் பங்கேற்றனர். 51 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ரத்ததானம் வழங்கினர். ரெட் கிராஸ் சங்க அலுவலர் லோகேஷ் குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News