நாகர்கோவில் ஆற்றில் மூழ்கிய மாணவர் சடலமாக மீட்பு

நாகர்கோவில் ஆற்றில் மூழ்கிய மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளர்.

Update: 2023-12-29 16:18 GMT
நீரில் மூழ்கி இறந்த பினு

குமரி மாவட்டம் நாகர்கோவில், சரலூர் காமராஜர் தெரு பகுதியை  சேர்ந்தவர் நாகலிங்கம் மகன் பினு (16). நாகர்கோவில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவரும் இவரது சகோதரர் மற்றும் நண்பர்கள் மூன்று பேர் என  மொத்தம் 5 பேர் ஒன்று சேர்ந்து நேற்று  பழையாற்றில்  குளித்தனர்.      

அப்போது பினு எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினர். இது குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும், கோட்டார் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  தீயணைப்பு துறையினர் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பினு மாயமான பகுதியில் இருந்து சிறிது தொலைவில் குமரி அணை உள்ளது. எனவே குமரி அணையில் தேடும் பணி இரவு வரையிலும் நடந்தது. ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.      

 இதை அடுத்து இன்று 2-வது நாளாக பினுவை  தேடும் பணி நடைபெற்றது. அவரை அதே பகுதியில் பிற்பகலில்  சடலமாக மீட்டனர் . இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News