திருபுவனத்தில் கொல்லாமை அறம் நூல் வெளியீட்டு விழா

திருபுவனத்தில் நேற்று நடைபெற்ற "கொல்லாமை அறம்" நூல் வெளியீட்டு விழாவில் . திருவடிக்குடில் சுவாமிகள் கலந்து கொண்டார்.

Update: 2024-04-11 07:03 GMT

திருபுவனத்தில் நேற்று நடைபெற்ற "கொல்லாமை அறம்" நூல் வெளியீட்டு விழாவில் திருவடிக்குடில் சுவாமிகள் கலந்து கொண்டார்.


கும்பகோணம் வட்டம், திருபுவனத்தில் நேற்று நடைபெற்ற "கொல்லாமை அறம்" நூல் வெளியீட்டு விழாவில் தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள் பேசினார். அவர் கூறியதாவது : சிவமயம் சைவ சமயம் சிவாலயங்களிலும் ஆதீன மடங்களிலும் மட்டும்தான் உள்ளதா? என்றால்; அங்கு மட்டும் இல்லை. ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள அய்யனார், மாரியம்மன், வீரனார், காளியம்மன் கோயில்களில் அருட் பிரசாதமாக வழங்கப்படும் அந்த திருநீற்றின் வெள்ளொளி மீதில் சைவ சமயம் பிரகாசிக்கிறது. உயிர் பலியிடுதல் என்னும் துவக்க நிலை வழிபாட்டில் இருந்து விடுபட மக்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மகான்களின் சான்றோர்களின் கருத்துக்களை முன்னிறுத்துவதோடு, பல்வேறு தீர்வுகளையும் உள்ளடக்கி இருக்கும் இதுபோன்ற நூல்கள் சவாலான அந்த வேலையைச் செய்கின்றன

Tags:    

Similar News