குத்துச்சண்டை போட்டி: பதக்கம் வென்ற மாணவருக்கு ஆட்சியர் பாராட்டு

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற மாணவருக்கு ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.

Update: 2024-01-20 16:19 GMT
மாணவரை பாராட்டிய ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர் ஸ்ரீரிஷிவந்த் மாநில அளவில் தர்மபுரியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் பெற்றுள்ளதை, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் கற்பகத்திடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிகழ்வின் போது ஒகளுர் பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசேகரன் உடற்கல்வி ஆசிரியர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News