மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு!

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் மளிகை கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2024-02-19 11:40 GMT

மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு!

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு நேருஜீ நகரை சேர்ந்தவர் பொன்சேகர் (54). இவர் முத்தையாபுரம் கீதா நகரில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை வழக்கம் போல அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்றுகாலையில் மீண்டும் அவர் கடைக்கு வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் பதறியவாறு கடைக்குள் சென்று பார்த்தபோது, உள்ளே பணப்பெட்டியில் வைத்து இருந்த ரூ.5ஆயிரத்து 750 திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் முத்தையாபுரம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News