காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு - விரைந்து சரி செய்த பேரூராட்சி

Update: 2023-12-12 11:37 GMT

குடிநீர் குழாய் உடைப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
வேடசந்துாரில் ரோடு அகலப்படுத்தும் பணியின் போது காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீரிட்டு வெளியேறியது.கரூரில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் கொண்டுவரப்படும் காவிரி குடிநீர் வேடசந்துார் எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள மேல்நிலைத் தொட்டியில் ஏற்றப்படுகிறது. இங்கிருந்து வேடசந்துார் ஆத்துமேடு உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளுக்கு குடிநீர் சப்ளையாகிறது. நேற்று மதியம் மண்அள்ளும் இயந்திரத்தின் மூலம் நடந்த எரியோடு வேடசந்துார் ரோடு அகலப்படுத்தும் பணியின் போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீரிட்டு வெளியேறியது. பேரூராட்சி பணியாளர்கள் சப்ளையை நிறுத்தினர். இதன் பிறகு குழாய் மாற்றியமைக்கப்பட்டது.
Tags:    

Similar News