கீழ் சவுளுப்பட்டியில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து நகை திருட்டு

கீழ் சவுளுப்பட்டியில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து நடந்த தங்க நகை திருட்டை தர்மபுரி நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

Update: 2024-04-06 03:57 GMT

பைல் படம்

தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ் சவுளுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவன். இவரது மனைவி சுமதி இவர்கள் இளநீர் வியாபாரம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம், சுமதி வீட்டை பூட்டி விட்டு, தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

நேற்று சுமதி வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த இரண்டே கால் பவுன் நகை திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் தர்மபுரி நகர பி1 காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News