கூவம் ஆற்றில் மேம்பால பணி துவக்கம்.

கூவம் ஆற்றில் மேம்பாலத்திற்கு அடித்தளம் அமைக்கும் பணி துவங்கப்பட்டு வேகமாக நடைபெற்று வருகிறது.

Update: 2024-02-28 16:48 GMT

கூவம் ஆற்றில் மேம்பால பணி

மதுரவாயல் வழியாக செல்லும் கூவம் ஆற்றின் குறுக்கே திருவேற்காடு, அடையாளம்பட்டு, மதுரவாயல், நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தரைப்பாலங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு மழைக்காலத்திலும், கூவம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது, தரைப்பாலங்கள் மூழ்கி, சுற்றுப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். சென்னையில் கடந்த 2022 நவம்பர் -- டிசம்பரில் பெய்த வடகிழக்கு பருவமழையின் போது, கூவம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலங்கள் மூழ்கின. இதையடுத்து, மதுரவாயல் கூவம் ஆற்றின் குறுக்கே, உள் கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ், இரண்டு இடங்களில் உயர் மட்ட மேம்பாலம் கட்ட மாநகராட்சி திட்டமிட்டது. அதன்படி, நொளம்பூர் யூனியன் சாலை, சன்னதி முதல் குறுக்கு தெரு, பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், 31.65 கோடி ரூபாய் மதிப்பிலும்; சின்ன நொளம்பூர் -- பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், 42.71 கோடி ரூபாய் மதிப்பிலும், இரு மேம்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டது. இதில், சின்ன நொளம்பூரை இணைக்கும் மேம்பால பணிகள் 40 சதவீதம் முடிந்துள்ளன. ஆனால், நொளம்பூர் யூனியன் சாலை மற்றும் சன்னதி முதல் குறுக்கு தெரு வழியாக அமைய உள்ள மேம்பால பணி, நிலம் கையகப்படுத்துதலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தாமதமானது. தற்போது, இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு மேம்பாலத்திற்கு அடித்தளம் அமைக்கும் பணி, துவங்கப்பட்டு வேகமாக நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News