எருது விடும் விழாவில் சீறி பாய்ந்த காளைகள்

ஆம்பூர் அடுத்த வீராங்குப்பத்தில் நடந்த எருது விடும் விழாவை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.

Update: 2024-01-25 08:11 GMT

எருது விடும் விழா

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி எருது விடும் விழா நடைப்பெற்றது.. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் எருது விடும் விழாவிற்கு அனுமதி அளிக்காததால், எருது விடும் விழா காலதாமதமாக எருது விடும் விழா தொடங்கியது, இந்த எருது விடும் விழாவில் வேலூர்,திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஆந்திர மாநிலம் குப்பம், ஆகிய பல்வேறு பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றன, இதனை தொடர்ந்து வாணியம்பாடி வருவாய் கோட்டாச்சியர் பிரேமலதா உறுதிமொழி ஏற்று எருது விடும் விழாவை துவக்கி வைத்தார், கால்நடை மருத்துவர்களின் பரிசோதனைக்கு பின்னர் வாடி வாசல் வழியாக காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன, குறைந்த மணிதுளிகள் குறிப்பிட்ட இலக்கை கடந்த எருதிற்கு முதற்பரிசாக 1 லட்சம் ரூபாயும் இரண்டாவது பரிசாக 70 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக, 50 ஆயிரம் ரூபாய் என 30க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன,இந்த விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எருது பிடி வீரகள் மற்றும் பார்வையாளர்கள் பங்கேற்று கண்டு களித்தனர்
Tags:    

Similar News