பள்ளப்பட்டியில் இருந்து வேலூருக்கு பேருந்து சேவை: எம்எல்ஏ துவக்கி வைப்பு

பள்ளப்பட்டியில் இருந்து வேலூர் புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து சேவையை ம்எல்ஏ இளங்கோ துவக்கி வைத்தார்.

Update: 2024-03-12 13:25 GMT

புதிய பேருந்து சேவையை துவக்கி வைத்த எம்எல்ஏ

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்ட, பள்ளப்பட்டி பகுதியில் இருந்து வேலூர் வரை செல்வதற்கு பஸ் வசதி செய்து தர வேண்டும் என அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் கேட்டு இருந்தனர்.

இந்த வழித்தடத்தில் புதிய பேருந்து வசதி துவக்கி வைக்க வந்த எம்எல்ஏ இளங்கோவிற்கு பொன்னாடை அணிவித்து, கட்சியினர் வரவேற்பு தெரிவித்தனர் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, தமிழக போக்குவரத்து துறை சார்பில், பள்ளப்பட்டியில் இருந்து சின்ன தாராபுரம், தென்நிலை, க. பரமத்தி,நொய்யல், வேலாயுதம்பாளையம் வழியாக வேலூர் வரை செல்லும் புதிய பேருந்துக்கு மலர்கள் தூவி எம்எல்ஏ இளங்கோ துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் முனைவர் ஜான், அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் ஜெயந்தி மணிகண்டன், அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள்,கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு புதிய பேருந்து துவக்க விழாவை சிறப்பித்தனர்.

Tags:    

Similar News