சோலார் பேனல் திட்டம் அஞ்சலகத்தில் பதிவு செய்ய அழைப்பு

வீடுகளில் சோலார் பேனல் அமைத்து மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் என்ற திட்டத்தை, மத்திய அரசு அறிவித்து உள்ளது.

Update: 2024-03-02 08:52 GMT

சோலார் பேனல் திட்டம் அஞ்சலகத்தில் பதிவு செய்ய அழைப்பு

வீடுகளில் சோலார் பேனல் அமைத்து பேட்டரிகளில் மின்சாரத்தை சேமித்து மக்களே பயன்படுத்த முடியும் என்ற நிலையில், அவர்களுக்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் என்ற திட்டத்தை, மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த திட்டத்தில் இணைவோர் தங்களுடைய வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை பெறுவதுடன் உபரி மின்சாரத்தை வினியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதன் வாயிலாக 15,000 - 18,000 ரூபாய் வரை ஒவ்வொரு குடும்பமும் மிச்சப்படுத்தும் வாய்ப்பு ஏற்படும்.

இந்த திட்டம் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற்கும் உதவும். இத்திட்டத்தில் இணைய விருப்பம் உள்ள பொதுமக்களின் விபரங்களை சேகரிக்கும் பணியை மேற்கொள்ள, தபால் துறையில் பணிபுரியும் அனைத்து தபால்காரர்களையும், மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

எனவே, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்டவர்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பெற, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தில் உள்ள தபால்காரரையோ அல்லதுஅருகில் உள்ள அஞ்சலகத்தையோ தொடர்பு கொண்டு தங்கள் விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கோட்ட அஞ்சலங்களின் கண்காணிப்பாளர் அருள்தாஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News