சிவன்மலையில் பிரச்சாரத்தை தொடங்கிய தாமாக வேட்பாளர் விஜயகுமார்

சிவன்மலையில் பிரதமர் மோடி பெயரில் அர்ச்சனை செய்து தாமாக வேட்பாளர் விஜயகுமார் பிரச்சாரத்தை தொடங்கினார்.

Update: 2024-04-03 11:08 GMT

ஈரோடு பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில்  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஜயகுமார் அவர்கள், காங்கேயம் சிவன்மலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோயிலில்  பிரதமர் மோடி அவர்கள் பெயரில் அர்ச்சனை செய்தும், சிறப்பு பூஜைகள் நடத்திய பின்னர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

காங்கேயத்தில் ஒன்றிய நகரத்தில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் திறந்த வேனில் வீதி வீதியாக சென்று சைக்கிள் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்,தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளருடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர் முன்னாள் எம்எல்ஏ மற்றும் பாஜகவின் ஈரோடு தொகுதி பொறுப்பாளர் பழனிசாமி,பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் மோகனப்பிரியா,மாவட்டத் தலைவர் மங்களம் ரவி,துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், நகர தலைவர் சிவபிரகாஷ்,தமிழ் மாநில காங்கிரஸ் திருப்பூர் மாவட்ட தலைவர் ஓ.கே.சண்முகம், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் தண்டபாணி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள், பாட்டாளி மக்கள் கட்சியினர்  உட்பட கூட்டணி கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு சைக்கிள் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.

Tags:    

Similar News