திருச்செந்தூர் அருகே கார் தீப்பற்றி எரிந்து சேதம்!

திருச்செந்தூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்து சேதம் ஆனது.

Update: 2024-05-03 05:51 GMT

 கார் தீப்பற்றி எரிந்து சேதம்

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் புதுக்கடை தெருவைச் சேர்ந்தவர் அப்துல் கரீம் (35). இவர் நேற்று மாலை தனது காரில் குடும்பத்துடன் அடைக்கலாபுரம் சாலையில் திருச்செந்தூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். அடைக்கலாபுரம் டாஸ்மாக் கடை அருகே வந்த போது காரின் முன்பக்கத்தில் இருந்து திடீரென புகை வந்தது. இதையடுத்து கார் ஓரமாக நிறுத்தப்பட்டது. அதில் இருந்த அப்துல் கரீம் உள்பட அனைவரும் உடனடியாக கீழே இறங்கினார்கள். தொடர்ந்து கார் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தண்ணீைர பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் கார் எரிந்து நாசமானது. எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
Tags:    

Similar News