நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து - பெண் உயிரிழப்பு

ஆலங்குளத்தில் நின்றிருந்த லாரி மீது கார் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-26 03:57 GMT

விபத்துக்குள்ளான கார் 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஜோதி நகரை சேர்ந்த பீர் முகமது (50). தனது உறவுக்காரப் பெண் நூர் (65) என்பவருடன் நெல்லையில் இருந்து நேற்று இரவு காரில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது கார் ஆலங்குளம் யூனியன் அலுவலகம் அருகே வந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக பலமாக மோதியது. இதில் நூர் சம்பவ இடத்திலேயே பலியானார். காயம் அடைந்த பீர் முகமது ஆகியோரே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News