மதுராங்கம் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதல்: தந்தை, மகன் பலி

மதுராங்கம் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகன் பலியானர்.

Update: 2024-01-02 13:36 GMT

கோப்பு படம் 

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் புக்கதுறை கூட்டு சாலை அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் மதுரையை சேர்ந்த அஸ்வின்குமார் (28) மற்றும் அவரது 6 மாத ஆண் குழந்தை திவானா சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் அவரது மனைவி மகள் காயம் அடைந்தனர்..அவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த விபத்து குறித்து படாளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

Tags:    

Similar News