கார் - லாரி மோதல் : குழந்தை பரிதாப பலி

உத்தனபள்ளி அருகே காரும் லாரி மோதிக் கொண்ட விபத்தில் 1.5 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் காயமடைந்த 3 பேர் ஓசூர், பெங்களுர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-06-18 04:17 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் உத்தனப்பள்ளி அருகே பாலக்கோடு மங்கலம்பட்டியைச் சேர்ந்தவர் பெரியண்ணன் தனது மனைவி குழந்தைகளுடன் பெங்களூரில் இருந்து சொந்த ஊருக்கு உறவினரின் திருமணத்திற்காக தர்மபுரி நோக்கி வந்து கொண்டிருந்தார் அப்போது கார் உத்தனப்பள்ளி அருகே வரும்போது காரும் எதிரே வந்த லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் குழந்தை லட்சனா சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. காரில் இருந்த மூன்று பேரும் படுகாயமடைந்தனர் பெரியண்ணன் ஓசூர் தனியார் மருத்துவமனையிலும், அவரின் மனைவி குழந்தை இருவரும் உயிர் ஆபத்தான நிலையில் பெங்களூர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரிடம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News