சேலத்தில் பெண்ணை தாக்கிய 6 பேர் மீது வழக்கு !

நன்கொடை கொடுக்காததால் வீட்டுக்குள் புகுந்து பெண்ணை கடுமையாக தாக்கிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-04-09 04:49 GMT

வழக்குப் பதிவு

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆண்டாள் (வயது 57). இவருடைய வீட்டுக்கு நேற்று முன்தினம் சிலர் வந்தனர். பின்னர் அவர்கள் காளியம்மன் கோவில் திருவிழாவுக்கு நன்கொடை கேட்டனர். அதற்கு அவர் ஏற்கனவே கோவிலுக்கு நன்கொடை கொடுத்துவிட்டதாக கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றார். நன்கொடை கொடுக்காததால் அவர்கள் வீட்டுக்குள் புகுந்து ஆண்டாளை கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். காயமடைந்த ஆண்டாள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் செவ்வாய்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி பெண்ணை தாக்கியதாக சக்திவேல், குமரேசன், ராமு உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News