வரதட்சணை கொடுமை கணவர் மீது வழக்கு !

திருக்கோவிலுார் அருகே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-03-11 05:43 GMT

காவல் நிலையம்

திருக்கோவிலுார் அருகே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். திருக்கோவிலுார் அடுத்த காட்டுப்பையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி கன்னிகா, 30; திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 பிள்ளைகள் உள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு முன் சக்திவேல், தாய் சரஸ்வதி, தந்தை கண்ணன், தங்கை பரிமளா ஆகியோர் வரதட்சணை கேட்டு கன்னிகாவை தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டனர். தற்பொழுது சக்திவேல் வேறு ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதனை அறிந்த கன்னிகா நியாயம் கேட்க கணவரிடம் சென்ற போது, கணவர் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து கன்னிகாவைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் சக்திவேல் உட்பட 4 பேர் மீது திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News