முன் விரோதம் ஒருவர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி அருகே சொத்து தகராற்றில் கொலை மிரட்டல் விடுத்தார் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-02-16 08:05 GMT

கள்ளக்குறிச்சி 

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி. மழவராயனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்தாஸ், 65; அதே கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இருவருக்குமிடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் அருள்தாஸ் ஏமப்பூர் அரசு பள்ளி அருகே நின்றுகொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த கோபாலகிருஷ்ணன், அருள்தாசை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின்பேரில் கோபாலகிருஷ்ணன் மீது திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News