முதியவரை தாக்கிய மூன்று பேர் மீது வழக்கு

தியாகதுருகம் அருகே நிலம் தொடர்பாக பிரச்சனையில் முதியவரை தாக்கிய மூன்று பேர் மீது வழக்கு

Update: 2024-02-19 07:00 GMT

முதியவரை தாக்கிய மூன்று பேர் மீது வழக்கு

தியாகதுருகம் அடுத்த உதயமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மொட்டை, 60; விவசாயி. அதே ஊரைச் சேர்ந்தவர் ஏழுமலையான், 47; இருவருக்குமிடையே நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. கடந்த 1ம் தேதி மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில், ஏழுமலை, அவரது மனைவி செல்வி, 44; சகோதரி பட்டு, 45; ஆகியோர் சேர்ந்து மொட்டையை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின்பேரில், ஏழுமலை உட்பட 3 பேர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News