மினி பேருந்து நடத்துநரை தாக்கிய 2 போ் மீது வழக்கு !!

மினி பேருந்து நடத்துநரை தாக்கிய 2 போ் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனா்.

Update: 2024-05-23 11:10 GMT

வழக்கு பதிவு

மினி பேருந்து நடத்துநரை தாக்கிய 2 போ் மீது வழக்கு தஞ்சாவூா், மாவட்டம் கும்பகோணம், பாலக்கரையிலிருந்து மேலாத்துக்குறிச்சிக்கு செவ்வாய்க்கிழமை இரவு மினி பேருந்து சென்றது. இதில் நடத்துநராக சாத்தங்குடியைச் சோ்ந்த குமாா் மகன் மணிகண்டன் (28) பணியில் இருந்தாா். பேருந்து சாத்தங்குடிக்கு சென்ற போது மது போதையிலிருந்த 2 போ் பேருந்தை மறித்தனா். இதைக் கண்டித்த மணிகண்டனை அவா்கள் தகாத வாா்த்தைகளால் பேசி சரமாரியாகத் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்துநரைத் தாக்கிய 2 போ்களைத் தேடி வருகின்றனா்.
Tags:    

Similar News