தொழிலாளியை தாக்கிய 2 பேர்- போலீசார் வழக்கு பதிவு
ரிஷிவந்தியம் அருகே கூலி தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.;
Update: 2024-02-14 05:37 GMT
தொழிலாளியை தாக்கிய 2 பேர்- போலீசார் வழக்கு பதிவு
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த பிரிவிடையாம்பட்டை சேர்ந்தவர் முருகன்,40; பெங்களூரில் கூலி வேலை செய்கிறார். இவருக்கும், இவரது தம்பி மனைவி தனலட்சுமியின் குடும்பத்திற்கும் இடம் தொடர்பாக பிரச்னை உள்ளது. கடந்த 7ம் தேதி தனலட்சுமியின் தம்பி பட்டுராஜா மகன் வெள்ளையதேவன் மற்றும் கருணாநிதி ஆகியோர் முருகனை திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில் வெள்ளையதேவன், கருணாநிதி ஆகியோர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.