குடும்ப பிரச்சினை காரணமாக கணவரை தாக்கிய மனைவி மீது வழக்குப்பதிவு

விருதுநகரில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவரை தாக்கிய மனைவி உட்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-04-25 04:01 GMT
 விருதுநகரில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவரை தாக்கிய மனைவி உட்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவை சார்ந்தவர் பாலமுருகன் இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. கருத்து வேறுபாடு காரணமாக தமிழ்ச்செல்வி தனது தாய் வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து கடந்த 23ஆம் தேதி மனைவியை சேர்ந்து வாழ அழைப்பதற்காக பாலமுருகன் சென்ற பொழுது தமிழ்ச்செல்வி வர மறுத்ததாகவும் அதற்கு அவரின் உறவினர்களான மாரியம்மாள் தனலட்சுமி விஜய் கருப்பசாமி ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து கொண்டு பாலமுருகனை தாக்கி காயப்படுத்திய நிலையில் அவர் மயக்கம் அடைந்ததாகவும் மயக்கம் அடைந்த திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட பின்பு அங்கு சிகிச்சை பெற்ற பின்பு மதுரையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் இந்த சம்பவம் குறித்து வீரசோழன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News