மது விற்பனையில் ஈடுபட்ட நபர் மீது வழக்கு பதிவு

மது விற்பனையில் ஈடுபட்ட நபர் மீது வழக்கு பதிவு. 12 குவாட்டர் மது பாட்டில்கள் பறிமுதல்.

Update: 2024-04-09 16:04 GMT
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, மணல்மேடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், ஏப்ரல் 8ம் தேதி மதியம் 12 மணியளவில், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடை அருகே, புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் பகுதியைச் சேர்ந்த குமார் வயது 40 என்பவர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், குமார் விற்பனைக்காக வைத்திருந்த 12 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.
Tags:    

Similar News