தலைவாசல்: ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் பறிமுதல்

தலைவாசல் அருகே பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2024-03-27 07:19 GMT

பணம் பறிமுதல்

கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி தலைவாசல் நத்தகரை டோல்கேட்டில் நேற்று (மார்ச் 25) தோட்ட கலைத்துறை உதவி இயக்குநர் ஞானப்பிரியா தலைமையில் வாகன தணிக்கை நடைபெற்றது. அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டதில், உரிய ஆவணம் இல்லாத ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்து 625 இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அந்த நபர் ஆத்தூர் முல்லைவாடி பகுதியை சேர்ந்த தாமோதரன் என்பதும் தெரியவந்தது. பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

Similar News