நத்தம் அருகே ரூ.92 ஆயிரத்து 100 பணம் பறிமுதல் !

நத்தம் அருகே உரிய ஆவணமின்றி எடுத்து சென்றவரிடம் இருந்து ரூ.92 ஆயிரத்து 100 பணத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2024-04-05 06:29 GMT

 பணம் ஒப்படைப்பு 

நத்தம் அருகே உரிய ஆவணமின்றி எடுத்து சென்றவரிடம் இருந்து ரூ.92 ஆயிரத்து 100 பணத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சமுத்திராப்பட்டி சோதனைச் சாவடி அருகில் வாகன சோதனை தேர்தல் நிலைக்கண்காணிப்பு குழு அணித் தலைவர் ஆபிரஹாம் தலைமையில் நடைபெற்றது.. அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தில் புன்னப்பட்டியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் ரூ.92 ஆயிரத்து 100 உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்றது தெரியவந்ததையடுத்து அதை கைப்பற்றிய அதிகாரிகள் நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சுகந்தியிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News