பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே வாகன சோதனையில் ரூ. 60 ஆயிரம் பறிமுதல்
பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் ரூ. 60 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-03-24 08:22 GMT
பறிமுதல்
பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே உள்ள போலீஸ் செக் போஸ்ட் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் முத்துக்குமார் தலைமையில் சிறப்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் பறக்கும் படை குழுவினர் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கரூரிலிருந்து வேகமாக வந்த லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது மகாராஷ்டிராவை சேர்ந்த லாரி டிரைவர் அமித்சுனில் (24) என்பது தெரியவந்தது. இதில் அவர் கரூரில் பகுதிக்கு திராட்சை லோடு ஏற்றிச் சென்று அங்கு விற்பனை செய்து விட்டு வந்ததும், அதற்குரிய பணம் ரூ.60 ஆயிரத்தை லாரியில் மறைத்து வைத்திருந்தையும் கண்டுபிடித்தனர். அதனை தொடர்ந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 60 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.