ராமநாதபுரம்: தலி செயின் பறித்த இருவர் கைது

ராமநாதபுரம் அரசு பள்ளி கணினி ஆசிரியரின் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற இரு இளைஞர்கள் தனுஷ்கோடியில் அருகே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-12-08 11:09 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராமநாதபுரம் பட்டினம்காத்தான் பகுதியைச் சேர்ந்த ராதிகா. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கணிணி ஆசிரியரான இவர் நேற்று பள்ளி முடிந்து விட்டு இருசக்கர வாகனத்தின் வந்து வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாது இரு இளைஞர்கள் முகவரி கேட்பது போல் ஆசிரியர் ராதிகா கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை பறித்தனர்.

ராதிகா தாலி சங்கிலியை இறுக்கி பிடித்துக் கொண்டதால் இளைஞர்கள் சுமார் 4 பவுன் அளவுள்ள பாதி சங்கிலியை பிடுங்கி சென்றனர். பின்னர் ராதிகா கேணிக்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கோயம்புத்தூர் கல்லுப்பட்டி சேர்ந்த சூரியா பிரசாத் மற்றும் திருச்சி புதூர் பகுதியைச் சேர்ந்த கோபு ஆகிய இருவரையும் இரு சக்கர வாகனத்துடன் தனுஷ்கோடியில் வைத்து போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 4 பவுன் தாலி சங்கிலியை பறிமுதல் செய்தனர்

Tags:    

Similar News