நகராட்சி நீருந்து நிலையத்தில் சேர்மன் திடீர் ஆய்வு

திருச்செங்கோடு சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள நீரூந்து நிலையத்தில் நகராட்சி தலைவர் தீடிர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-02-27 04:41 GMT
திருச்செங்கோடு நகராட்சி சந்தைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள நீரூந்து நிலையத்தை நகர் மன்ற தலைவர்  நளினி சுரேஷ்பாபு, நகராட்சி பொறியாளர் சரவணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கோடை காலம் நெருங்கும் முன்பே குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது,இதனை திருச்செங்கோடு நகராட்சி சார்பில் ஊழியர்கள் சரி செய்து வருகின்றனர், நகராட்சி பகுதி முழுவதும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, பொதுமக்கள் குடிநீரை வீணாக்க வேண்டாம் எனவும் குடிநீர் குழாய்களை அடைத்து வைக்கும் படியும் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கேட்டுக்கொண்டார்.
Tags:    

Similar News